20160716

பில்லி வஞ்சனை தீர்க்கும் பிரம்ம முனி சூரணம்.



சீரகம் 35 கிராம்

அதிமதுரம் 35 கிராம்

சிறுநாகப்பூ 35 கிராம்

கருஞ்சீரகம் 35 கிராம்

லவங்கப்பூ 35 கிராம்

சதகுப்பை 35 கிராம்

கொத்தமல்லி விதை 210 கிராம்

சீனிக் கற்கண்டு 420 சிராம்.




எல்லாச் சரக்குகளையும்

லேசாக வறுத்து இடித்து

சூரணமாக்கி அத்துடன்

கற்கண்டுத் தூளையும் சேர்த்து

பத்திரப்படுத்தவும்.




காலை, மாலை, இருவேளை

சாப்பிடும் முன்பு ஐந்து விரலால் அள்ளும் அளவு

எடுத்து சுடுதண்ணீரில்

சாப்பிட்டு வரவும்.




பயன்கள்:- உடம்பு திடமா

கும். குலையெரிவு நெஞ்சு

எரிச்சல் குணமாகி நெஞ்சு

திடப்படும். சிரசு சமபந்தப்

பட்ட தலைவலி காதுவலி

கண்நோய் அனைத்தும்

மற்றும் ஞாபகசக்தி குறைவு

குணமாகி அறிவாற்றல்

பெருகும்.பித்தம் சம்பந்தப்

பட்ட அனைத்தும் தீரும்.

கண் பிரகாசமாகும்.நல்ல

தூக்கம் உண்டாகும்.தீராத

புழுக் கிருமிகள் அழியும்.

இடுப்பு வலி கல்லடைப்பு

தீரும்.வாய் கோணல் வாய்

குளறுதல் தீரும்.காதுவலி

முதல் இடையில் ஏற்பட்ட

காது கேளாமை நோய் தீரும்

சளி இருமலோடு சேத்துமம்

அனைத்தும் தீரும். தொண்டை புண் கண்டமாலை உடம்பு

முழுவதும் நீர் சம்பந்தப்பட்ட

நோய் தீரும்.




இந்த மருந்து சாப்பிட்டவர்

களுக்கு மேற்கண்ட நோய்கள்

குணமாவதோடு ஏவல்

பில்லி வஞ்சனை போன்ற

தீயசக்திகளும் விலகும்.




இது ஒரு அற்புதமான மருந்து. அனுபவத்தில்

பலபேருக்கு கொடுத்து

பயனடைந்த மருந்து.

நன்றி.