20160229

சகல நோய் நிவாரணி வில்வம்





அனைத்து பாகங்களும் மருந்தாக பலன் தரும் தாவரங்களில் வில்வ மரமும் ஒன்று. இதன் இலை, பூ, காய், பழம், வேர், பிசின் பட்டை என அனைத்திலும் நோய் தீர்க்கும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது.

சிறுவர் முதல் பெரியோர் வரை தாக்கும் சிறு நோய்களானாலும் எளிதில் குணமடையா நோய்களானாலும் சிறந்த மூலிகை மருந்தாக செயல்படுகிறது இந்த வில்வ மரம். வில்வ மரத்தின் இலை காரத்தன்மை கொண்டவை. இதனை இடித்து பிழிந்த சாற்றில் பசும்பால் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் காய்ச்சல், சோகை, வீக்கம் குணமாகும். மூன்று இலைகளை சுத்தம்

செய்து தினமும் மென்று தின்று வந்தால் உட்செல்களிலுள்ள அனைத்து நோய்களும் அகலும். வில்வ இலையின் சாற்றுடன் அதே அளவு கல்யாண முறுங்கை சாற்றையும் சேர்த்து பருகிவர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். மேலும் பச்சை இலைகளாவும் உண்டுவர ஆஸ்துமா நோயையையும் கட்டுப்படுத்துகிறது.

வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்துவர கழிச்சல், மூலநோய் நீங்கும். இதுபோல் காய்தூளை சிறிது வெள்ளத்துடன் சேர்த்து உண்டால் இரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, செரிமான குறைவால் ஏற்படும் அஜீரண வயிற்று வலி நீங்கும். வில்வ பழத்தின் சதையை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை உட்கொண்டு வந்தால் சீதபேதி, பசியின்மை ஆகியவையும் குணமாகும்.

மேலும் பழத்தை ஓடு நீக்கி பிழிந்து சர்க்கரை பாகில் காய்ச்சி சர்பத் செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும், அதிக வேர்வை ஏற்படுவதும் குறைகிறது. மேலும் மலச்சிக்கல் வராது தடுக்கிறது. இது போல் வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் வீரியத்தன்மை கொண்டது. வில்வ வேர் பட்டையை பச்சையாக ஒருகிராம் சீரகத்துடன் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை 1 கப் பாலில் கலந்து வடிகட்டி காலையில் மட்டும் பருகிவர தாது பலப்படும்.

வில்வமரத்தின் பாகங்கள் சில நோய்களை முற்றாக குணப்படுத்தவல்லது. மேலும் சிறந்த கொலரா தடுப்பு மருந்தாகவும் வில்வமரத்தின் பாகங்கள் செயல்படுகின்றன.

குறிப்பு : மூலிகைச்சாற்றை இரண்டு வேளைகளுக்கு மேல் பருகக்கூடாது.

பல்வேறு நோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கும் மிகச்சிறந்த மூலிகை மரமாக விளங்கும் வில்வமரங்கள் சீதோஷ்ண நிலையில் வளர்வதுடன் தற்போது இம்மரங்கள் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரங்களின் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வு குறைவால் அழிந்துவரும் நிலையில் உள்ளன. இதிலிருந்து மீட்டு வில்வமரங்களில் விதைகளை நடவு செய்து அனைத்து இடங்களிலும் வளரச் செய்ய வேண்டும்.

மலர்களும் அதன் குணங்களும்





செம்பருத்திப்பூ : இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்புவலியால் அவதிப்படுபவர்கள் செம்பருத்திப்பூக்களை தண்ணீரில் இட்டு காய்ச்சி காலையும் மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும். குழந்தைகளுக்கு இப்பூவை சிறிது சுடுநீரில் தலையில் தேய்த்துக் குளிப்பாட்டி வந்தால் தலையில் உள்ள அழுக்குகள் நீங்கி முடி நன்கு வளரும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.








ரோஜாப்பூ : இருதயத்திற்கும், மனதிற்கும் வலிமை தரக்கூடியது. பசும் பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்துவந்தால் நெஞ்சில் சளி பிடிக்காது நீங்கிவிடும். இரத்தவிருத்திக்கும் துணைசெய்யும். சிவப்பு ரோஜாக்கள் மிகவும் உபயோகமானது.





மல்லிகைப்பூ : தலையில் சூடிக்கொள்வதால் கண்பார்வை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. உணர்ச்சிகளைத்தூண்டும் ஆற்றலும் அதிகரிக்கும். கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.



அகத்திப்பூ : அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலோடு சேர்த்து காய்ச்சி சக்கரை சிறிது சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு பித்த சூடு நீங்கும்.





முருங்கைப்பூ : ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச்செய்து தாதுப்பெருக்கம் அடையச்செய்யும் தன்மையது. அதை சுண்டல் செய்து சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.


குங்குமப்பூ : கர்ப்பம் தரித்த பெண்கள் ஒருநேரம் 5 முதல் 10 வரை குங்குமப்பூ இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சிக் குடித்து வர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.





வேப்பம்பூ : சிறந்த கிருமி நாசினி இப்பூவாகும். இப்பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது. இப்பூவை சுண்டல் செய்து சாப்பிட வயிற்றில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்துவிடும். சிறிது கசப்புத்தன்மை கொண்ட இப்பூவை வடகம் போன்று செய்து வெயிலில் உலர்த்தி காயவைத்து நல்லெண்ணெய் நெய் இவற்றில் பொரித்து சாப்பிடுவதால் கற்பப்பை பூச்சிகள் கோளாறுகள் நீங்கி சிறந்தபலனை அடையலாம். சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.





ஆவாராம்பூ : இரத்தத்துக்கு மிகவும் பயன்தரும், ஆவாரம்பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால் ,சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்குமாவுடன் சேர்த்து உடலில் தேய்த்து குளித்து வர வியர்வையால் ஏற்படும் நாற்றம் நீங்கும். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் குணமாகும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஆவாரம்பூ சிறிதளவு சிறு இஞ்சித்துண்டு, சிறுசீரகம் சிறிதளவு சேர்த்து அவற்றை கசாயம் போல் நீர்விட்டு காய்ச்சி குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.



வாழைப்பூ : வாழவைக்கும் வாழைப்பூ மிகுந்தமருத்துவ குணம் கொண்டது. இதை சுத்தம் செய்து சுண்டல் செய்து சாப்பிடுவதால் மலச்சிக்கலை நீக்கிவிடும். அத்துடன் உடலின் தேவையற்ற கழிவுப்பொருள்களை அகற்றும் தன்மை இப்பூவுக்கு உண்டு. வாரத்தில் ஒருமுறையேனும் உணவாக உட்கொள்ளும் போது உணவு செரிமாணம் அடைவது மட்டுமல்லாது எமக்கு மேலதிகமாக தேங்கப்படும் சத்துக்கள் கல்லாகமாறிவிடுவதையும் வாழைப்பூ கட்டுப்படுத்தி கரைத்து விடுகிறது.

கல்லாகும் தன்மை அளவுக்கு அதிகமான உணவால் ஏற்படுகிறது. அது மனிதர்க்கு உடல் உபாதையை மட்டுமல்ல உயிர் ஆபத்தையும் ஏற்படுத்தும். மருந்தாகும் உணவுவககளை அதாவது இலை பூ வகைகள் அதிகம் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நீண்ட ஆயுளுடன் நலமோடு வாழலாம்








சம்பங்கி பூ:

சம்பங்கி பூ

சீதாப்பழம்:

சீதாப்பழம்
நொச்சி இலை:
நொச்சி இலை

கஸ்தூரி மஞ்சள்:

கஸ்தூரி மஞ்சள்

பொடுதலை:

பொடுதலை
தும்பை பூ:

தும்பை பூ


மணத்தக்காளி / மிளகு தக்காளி கீரை:
மணத்தக்காளி / மிளகு தக்காளி கீரை



சப்பாத்திக்கள்ளி



சீமையகத்தி   வண்டுகடி செடி
Vitex trifolia Linn. நொச்சி



கண்டங்கத்திரி.

கல்யாண முருங்கை.



காட்டுச் சீரகம்:

காட்டுச் சீரகம்


கோவை / Ivy Guard:

கோவை / Ivy Guard

சுண்டை:

சுண்டை

மணலி கீரை:

 
மணலி கீரை

சிறியாநங்கை


சிறியாநங்கை
நீரரை / Water Shamrock


நீரரை / Water Shamrock


நீர் முள்ளி


நீர் முள்ளி

ஆகாயத் தாமரை  / Water Hyacinth:


ஆகாயத் தாமரை / Water Hyacinth

சதாவலி

சதாவலி

கற்கோவை:


கற்கோவை

மனோரஞ்சிதம்:


மனோரஞ்சிதம்

மகிழம் பூ:

மகிழம் பூ

நாகமல்லி:

நாகமல்லி