20160227

அப்பிரேக செந்தூரம்



நீரழிவு என்ற சர்க்கரை நோய் குணமாக அப்பிரேக செந்தூரத்தை ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும்.

அப்பிரேக செந்தூரத்தினால் குணமாககூடிய நோய்களாக சித்தர்களால் குறிப்பிட பட்டுள்ளாதாவது,
சயம் 8
ஈளை இருமல்
சேத்தும நோய் 96

இச்செந்தூரத்துடன் சஞ்சீவி சூரணத்தை சேர்த்து சாப்பிட மேக, நீரழிவு நோய்கள் இருபத்தி ஒன்றும் (21 வகை நோய்) குணமாகும்.

தேகத்தின் மாந்தை நோய், பிரமிய நோய், உட்சூடு மற்றும் எரிவு நோய் எல்லாம் சரி செய்து தேகமானது குளிர்சியுரும்.

விந்து பலம் பெரும், எலும்புரிக்கி நோய் ( எய்ட்ஸ் ) குணமாகி கண்கள் குளிர்ச்சியாகி தேகம் ஆரோக்கியம் பெரும்.


ஒண்ணாத செந்தூர மேடுத்துக்கொண்டு
உத்தமனே பணவிடைதான் தேனிற்கொள்ள
வண்ணாத வாதசயம் பித்தசயம் ரெண்டும்
வளமான சிலேட்டுமத்தின் சாயமும் போகும்
கண்ணாத கோவெண்ணெய் தன்னிற்கொள்ள
கைகடந்த மேகமது யிருபத்தொன்றும்
அண்ணாத ஆக்கைதனை விடுவோடும்
அப்பனே செந்தூர மருமைகாண

காணப்பா நீரிழிவு வலிமேகங்கள்
கண்மணியே நீரெரிவு நீர்ச்சுக்கு
வாணப்பா கல்லடைப்பு சதையடைப்பு
வளமான நீரடைப்பு நீர்ப்பாச்சல்குத்தல்
ஆணப்பா கிரந்தியுடன் புண்கள் சூலை
அரையாப்பு குட்டமுடன் குலைநோயெல்லாம்
மாணப்பா மதிமயங்கி யோடிப்போகும்
மகத்தான பிணிநோய்கள் மாண்டுபோமே

No comments: