20160326

கர்ப்ப காலத்தில் பாட்டி வைத்தியம்!



* கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இப்படிபட்டவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து, சட்டியில் வறுத்து-வெடிக்கும்போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால், கால் வீக்கம் குறையும்.

* மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தய கஞ்சி சாப்பிடுவது, சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

* 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீரில், சிறிதளவு வெண்ணெய் கலந்து மதியம் நேரத்தில் சாப்பிட தரலாம். கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரையிலும் சின்னவெங்காயம், சீரகம் சேர்த்த முருங்கை கீரை சூப் வைத்து சாப்பிடலாம். இதனால் பிரசவம் சுலபமாகும்.

* பிரசவநாள் நெருங்கும் நேரத்தில் சிலருக்கு அடிக்கடி வயிறுவலி வரும். அப்போது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த கசாயம் வைத்து சாப்பிடலாம். சாதாரண வலி என்றால் நின்றுவிடும். அதே பிரசவ வலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு என்று அர்த்தம்.

1 comment:

isha said...

nandri. phone number kodunga sir please