நம் சுவாசமண்டலம் பற்றி சற்று... “காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்று பட்டினத்தார் கூறுயிருக்கிறார். ஆக காயம் என்பது உடல், இந்த உடல் நிலைப்புத் தன்மை உடையதல்ல. நிலையாமை தத்துவத்தை உணர்த்தக்கூடிய ஒரு பொருள் எதுவென்றால் நம்முடைய உடம்பு என்றுதான் நாம் சொல்ல வேண்டும். காற்றடைத்த பையடா என்றால் ஒரு பையில் காற்று இருந்தால்தான் பைக்கு மதிப்பு, காற்றே இல்லையென்றால் ஒரு சறுகு மாதிரி போய்விடும். அதே போல் நம் உடம்பில் சுவாசம் ஒழுங்காக, சீராக, முறையாக இருக்கும் பொழுதுதான் மனிதன் மனிதனாக இருக்கிறான். உடம்புக்குள்ளே சீவன் என்கிற சிவம் இருக்கும் வரைதான் நாம் சீவனோடு இருக்கமுடியும். அந்த சீவன் என்ற சிவம் இல்லாத பொழுது நாம் சவமாக மாறிவிடுகிறோம் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு சுவாசம் என்பது மிக முக்கியமான ஒரு பகுதி.

நாம் ஏற்கனவே எலும்பு, நரம்பு, தசை இம்மூன்றும் ஒரு தொகுப்பு, இந்த மூன்றும் ஒழுங்காக இருக்கிற பொழுதுதான் ஒரு ஆரோக்கியமான உடலமைப்பு கிடைக்கும் என்று நாம் பேசியிருந்தோம். அதே போல் செரிமான மண்டலத்திற்கும் இரத்த ஓட்ட மண்டலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் நாம் பேசியிருந்தோம். செரிமான மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம் கூடவே சுவாச மண்டலம் இந்த மூன்றுக்குமான தொகுப்பும் மிக முக்கியமானது. இந்த மூன்றும் ஒருகோட்டுப் பாதையில் உள்ளது என்று சொல்ல வேண்டும். செரிமான மண்டலத்திற்கும் இரத்த ஓட்டமண்டலத்திற்கும் சுவாச மண்டலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு உணவுப்பொருளை ஒழுங்காக முறையாக செரிக்கவைக்கவேண்டும் என்றால் சுத்தமான காற்று வேண்டும். ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படும். பிராணசக்தி இருக்கிற பொழுதுதான் உணவுப்பொருள் ஊட்டமானப் பொருளாக மாறும். பிராணசக்தி அதிகமாக இருக்கக்கூடிய உணவுகள் என்னவென்றால் சமைக்காத பச்சைக்காய்கறிகள், கீரைகள் இவற்றை எடுக்கக்கூடிய நபர்களுக்குத்தான் பிராணசக்தி அதிகமாகும்.
பிராணசக்தி என்பது பஞ்சபூதங்களில் ஒன்றான காற்று. இந்தக் காற்றை ஒழுங்காக முறையாக இயக்கப்பழகுவது என்பது சுவாச மண்டலத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு விசயமாக இருக்கும். தினசரி அதிகாலை 4.30 மணியளவில் துயில் எழக்கூடிய பழக்கம் இருக்கிறது என்றால் பல்லாயிரக்கணக்கான நோய்களை நாம் ஓட ஓட விரட்ட முடியும். தூக்கம் என்பதே ஒரு வியாதி. தூங்காமல் தூங்கி சுகம்பெறும் நாள் எந்நாளோ என்று சித்தர்கள் கூறுவார்கள். ஒரு சராசரி மனிதனுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால் ஒரு சித்தனுக்கு ஐந்து நிமிடம் போதும் அல்லது பத்து நிமிடம் போதும். அவர்கள் தமது உடம்பை புதுப்பிப்பதற்கு ஏற்ற உடல்வாகு, உடல் கூறு மாறியிருக்கும். அதிகாலை தூக்கத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. படைப்பாற்றல் அதிகமாகக்கூடிய தன்மை அதிகாலையில் இருக்கும். அதிகாலையில் பார்த்தோம் என்றால் நல்ல சுவாசம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். நீங்கள் பிராணாயாமம் செய்ய வேண்டாம், மூச்சு பயிற்சி செய்ய வேண்டாம். அதிகாலையில் எழுந்து அதிகாலைக்காற்றை நன்றாக ஆழ்ந்து உள்மூச்சு வாங்கி சுவாசம் செய்கிற பொழுது நம்முடைய சுவாச மண்டலம் ஒழுங்காகும், சீராகும், நுரையீரல் பலமாகும். எவரொருவர் 4.30 மணிக்கு எழுந்து 6.00 மணிவரையிலும் சுவாசாஅப்பியாசங்களை மேற்கொள்கிறாரோ அவருடைய சுவாச மண்டலம் ஒழுங்காகும், முறையாகும், சீராகும், சுவாசப்பை நல்ல வலுவாகும், அதேபோல் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய சில அசுத்த சக்திகள் முழுமையாக போகக்கூடிய தன்மை உண்டு. சிலநேரங்களில் மது, புகை, போதை என்று மயக்கத்திலேயே இருக்கக்கூடிய ஆண்கள் அதிகம் உண்டு. இவர்கள் அனைவரும் கண்டிப்பாக காலையில் எழுந்தே பார்த்திருக்க மாட்டார்கள், இவர்களால் அதிகாலையில் எழுந்திருக்கவே முடியாது. அதிகாலையில் எழுந்து காரியங்களை செய்யக்கூடிய நபர்களுக்கு கண்டிப்பாக சுவாச மண்டலப் பிரச்சனைகள் சரியாகும். நம் முன்னோர்கள் நாடிசுத்தி பண்ணுவது, பிராணாயாமம் பண்ணுவது, பஸ்திரிகா பண்ணுவது, கபால்பதி பண்ணுவது போன்ற சுவாசப் பயிற்சிகளை ஏன் மேற்கொண்டார்கள் என்றால் சுவாச மண்டலத்தை வலுப்படுத்துவதற்காகத்தான்.
சுவாச மண்டலம் என்பது நம்முடைய நுரையீரலைக் குறிக்கும். நுரையீரல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கவேண்டும் என்றால் அதுசார்ந்த உணவுகளை மேற்கொண்டு சுவாசமண்டலம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரிசெய்துகொள்ள முடியும். சுவாசமண்டலத்தை ஒழுங்குபடுத்தக்கூடிய சில மூலிகைகளைப் பற்றி நாம் பார்ப்போம்.
சிறப்பாக நாம் சொல்லவேண்டுமென்றால் தூதுவளை, துளசி, ஆடாதொடா, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை இந்த மூலிகைகள் அனைத்துமே சுவாச மண்டலக்கோளாறுகளை முழுமையாகப் போக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு. சில வீடுகளில் தூதுவளையை துவையலாக நாம் அரைப்பது உண்டு. தூதுவளையை முள் நீக்கி லேசாக நெய் சேர்த்து வதக்கி அதைத் துவையலாக அரைத்து சாப்பிடும்பொழுது சளி, இருமல், கபம், தலைவலி, தலைபாரம் போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் தீரக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. தமிழில் ஒரு பழமொழி உண்டு “தூதுளை மாதுளை இருக்கும் வீட்டில் மார்பிலும் வயிற்றிலும் கலங்கம் இல்லை”. மார்புதான் இந்த சுவாச மண்டலத்தின் மூலஸ்தானம். ஆக நுரையீரலை வலுப்படுத்தக்கூடிய தன்மை தூதுவளைக்கு உண்டு. இந்தத் தூதுவளையை விடாமல் தொடர்ந்து சாப்பிட்டு வரக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் நுரையீரல் சார்ந்த, சுவாசம் சார்ந்த, மூச்சு சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும் என்று இந்தப் பழமொழியில் கூறியிருப்பார்கள். அதேபோல் மாதுளை சாப்பிடுபவர்களுக்கு வயிறு சார்ந்த பிரச்சனைகள், குடல் சார்ந்த பிரச்சனைகள், மலச்சிக்கல், சீதபேதி இவையனைத்தும் சரியாகும் என்பது அந்தப் பழமொழியின் உட்கருத்து. ஆக தூதுவளை, துளசி, ஆடாதொடா இம்மூன்றையும் சமஅளவு கலந்து வைத்துக்கொண்டு அதைத் தேனில் காலை மற்றும் இரவு என்று இரண்டுவேளையும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது சுவாசமண்டலம் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளையும் சரிசெய்ய முடியும்.
நம் உணவில் இரண்டு வகை உண்டு. ஒன்று அமில உணவுகள் (acidic foods), மற்றொன்று காரஉணவுகள் (Alkaline foods). கார உணவுகளை தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்றால் அதற்கு பச்சையான உணவுகள் சாப்பிடும் பொழுதுதான் அந்த பலனைப் பெற முடியும். இயற்கையான காய்கறிகளை அரைவேக்காட்டில் வேகவைத்து சாப்பிடுவது காரஉணவில் சேரும். அதேபோல் அரிசி சார்ந்த உணவுகள், பருப்புகள் நிறைய சேர்த்துக்கொள்வது, இயல்பான சாம்பார், ரசம், மோர், புளிக்குழம்பு இப்படியெல்லாம் சாப்பிடுவது எல்லாமே அமில உணவுகளில்தான் சேரும். இயற்கையாக எடுக்கக்கூடிய உணவுகள் முளைக்க வைத்த பயறுகள், தானியங்கள் எல்லாமே காரஉணவுகளில் சேரும். காரஉணவில் ஆக்சிஜன் அதிகமாக கிடைக்கும், பிராணசக்தி அதிகமாக கிடைக்கும். பிராண மூலக்கூறுகள் அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு வருகிறபொழுது சுவாசமண்டலக்கோளாறுகள் அனைத்தும் சரியாகும். சுவாசமண்டலம் ஒழுங்காக இருக்கும் பொழுதுதான் சுவாசம் நிலைக்கக்கூடிய தன்மை இருக்கும். சுவாச மண்டலக்கோளாறு ஒருவருக்கு வரஆரம்பித்துவிட்டது என்றால் நிரந்தரமாக சளி இருக்கலாம், இருமல், தும்மல், மூக்கடைப்பு, sinusitis என்று சொல்லக்கூடிய நீர்கோர்வை வியாதிகள், காசநோய், ஆஸ்மா போன்ற நோய்கள் எல்லாமே சுவாச மண்டலப் பிரச்சனைகளாலே வரும்.
சாதாரணமாக ஆஸ்துமா வந்திருக்கிறது என்றால் கூட உணவுமுறைப் பழக்கத்தினால் மிக எளிதில் சரிசெய்ய முடியும். ஆஸ்துமா இருக்கக்கூடியவர்கள், சுவாச மண்டலப்பிரச்சனைகள் இருப்பவர்கள் மந்தமான பொருட்களை தவிர்க்க வேண்டும். செரிமான மண்டலம், சுவாச மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம் இவையனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையது. சுவாச மண்டலம் ஒழுங்காக வேண்டும் என்றால் தயிர், மோர் போன்ற குளுமையான உணவுப்பொருட்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீம், ஐஸ் வாட்டர் போன்றவற்றை தவிர்க்கவேண்டும், காற்று பதனாக்கியிலேயிருந்து (Air conditioner) பழக்கப்படுத்துவதைத் தவிர்ப்பது இவையனைத்துமே சுவாசமண்டலத்தை மேம்படுத்தச் செய்யக்கூடிய ஒரு விசயமாக இருக்கும். அதேபோல் packing food, காரசாரமான உணவுப்பொருட்களை தவிர்ப்பது, Preservative கலந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, hair die, perfume பயன்படுத்துவது, அதிக மணம் இருக்கக்கூடிய வாசனை திரவியங்களை பயன்படுத்தாமல் இருப்பது இவையனைத்தும் சுவாச மண்டலத்தை மேம்படுத்துவதற்கு நாம் செய்யக்கூடிய தடுப்புமுறைகளாக இருக்கும்.
சுவாசமண்டலம் சார்ந்துதான் ஒவ்வாமை அதிகமாகும். நம் உடம்பில் ஒவ்வாமைக்கூறுகள் அதிகமாகிவிட்டது என்றால் நீங்கள் சாப்பிடக்கூடிய சில உணவுப்பொருட்களில் கூட ஒவ்வாமை உண்டு பண்ணும். ஒரு சிலருக்கு வாழைப்பழம் ஆகவே ஆகாது, ஆனால் ஒரு சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட்டாலும் ஒன்றுமே செய்யாது. உடல்கூறை மாற்றக்கூடிய தன்மை ஒவ்வாமை கூறுக்கு உண்டு. ஒவ்வாமைக்கூறுகள் எதில் எல்லாம் இருக்கிறதோ அவற்றை முழுமையாக தவிர்த்துவிட்டு நம் உடம்பில் இரத்தத்தை அதிகப்படுத்துவது, செரிமானத்தை அதிகப்படுத்துவது போன்றவற்றை செய்துகொள்ளமுடியும். செரிமானக்கோளாறு இல்லாத உடம்பையும், இரத்த ஓட்டத்தை ஒழுங்காக முறையாக்கி இரத்த அளவை அதிகப்படுத்தி ஒரே சீராகக் கொண்டு வந்தால் சுவாசம் நிலைக்கும். சுவாசம் அப்பொழுதுதான் நிலைப்புத் தன்மைக்குப் போகும். சுவாசத்தை ஒழுங்காக நிலைப்புத் தன்மைக்குக் கொண்டுவரவேண்டும் என்றால் நல்ல தேர்ந்தெடுத்த உணவுகளை சாப்பிடும் பொழுது அதனடிப்படையில் செரிமான மண்டலம் வலுவாகும். அதேபோல் நல்ல தேர்ந்தெடுத்த உணவுகளை எடுத்து இரத்தத்தை அதிகப்படுத்தும் பொழுது இரத்த ஓட்டமண்டலம் சீராகும் பொழுது நம்முடைய சுவாசமண்டலம் ஒரே சீராக இருக்கும். உடல் நிலைப்புத்தன்மை உடையதாக இருக்கும்.
ஆக ஒரு மனிதனுக்கு எலும்பு, நரம்பு, தசை வலுவாக இருக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு செரிமான மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், சுவாசமண்டலம் மிக வலுவாக இருக்க வேண்டும். இந்த ஆறு மண்டலமும் வலுவாக இருக்கிற பட்சத்தில்தான் உடல் நிலைப்புத்தன்மையுடன் ஆயுள் கெட்டி என்ற தன்மைக்கு உடம்பைக் கொண்டுவர ஆரம்பிக்கும். ஆக ஒருமனிதன் ஆரோக்கியமாக வாழவேண்டும் சீராக வாழவேண்டும் என்றால் இந்த ஆறுமண்டலமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமானது, அத்தியாவசியமானது. உடல்நலம் பேணக்கூடிய நம்முடைய முறைகள் அடிப்படையில்தான் இந்த ஆறு மண்டலங்களை வலுப்படுத்த முடியும்.
தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுவது, மதுவுக்கு அடிமையாவது, மாதுக்கு அடிமையாவது, புகை-போதைக்கு அடிமையாவது, வாழ்வியல் முறைகளை முழுமையாக மீறுவது, இதனடிப்படையில் உடல் தேய்வு, உடல் சோர்வு, உடல் தளர்வு, உடல் அழிவு எல்லாமே உண்டாகக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆக இந்த ஆறு மண்டலங்களை ஒரு சராசரி மனிதன் மேம்படுத்திக்கொண்டால் மட்டுமே ஆரோக்கியம் என்பது நிலைக்கக்கூடிய தன்மை இருக்கும். இந்த ஆறு மண்டலங்களையும் வலுப்படுத்த அறுசுவை உள்ள இயற்கை உணவுகளாலும், சைவ உணவுகளாலும் மட்டுமே சாத்தியமாகும். ஆக இந்த ஆறுமண்டலங்கள் அடிப்படையில்தான் நம்முடைய நாளமில்லா சுரப்பு மண்டலம், கழிவு மண்டலம், இனப்பெருக்க மண்டலம் எல்லாமே செயல்படும். நாளமில்லா சுரப்பு மண்டலத்தின் பணிகள் என்ன?, அதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?, கழிவு மண்டலத்தை ஒழுங்குபடுத்த, முறைப்படுத்த அதை சீராக்க என்னென்ன உணவுகளை சாப்பிடவேண்டும்?, எப்படி பேணி பாதுகாக்கவேண்டும்?, அடுத்து ஆணுக்கும் பெண்ணுக்குமான இனப்பெருக்கம் என்பது மனித சுழற்சிக்கு, வாழ்வியல் சுழற்சிக்கு, சமூக சுழற்சிக்கு எவ்வளவு அத்தியாவசியமானது?, என்பதையெல்லாம் அடுத்து வரக்கூடிய கட்டுரைகளில் நாம் தெள்ளத்தெளிவாகப் பார்ப்போம்.
நன்றி



சுவாச மண்டலம் என்பது நம்முடைய நுரையீரலைக் குறிக்கும். நுரையீரல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கவேண்டும் என்றால் அதுசார்ந்த உணவுகளை மேற்கொண்டு சுவாசமண்டலம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரிசெய்துகொள்ள முடியும். சுவாசமண்டலத்தை ஒழுங்குபடுத்தக்கூடிய சில மூலிகைகளைப் பற்றி நாம் பார்ப்போம்.




ஆக ஒரு மனிதனுக்கு எலும்பு, நரம்பு, தசை வலுவாக இருக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு செரிமான மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், சுவாசமண்டலம் மிக வலுவாக இருக்க வேண்டும். இந்த ஆறு மண்டலமும் வலுவாக இருக்கிற பட்சத்தில்தான் உடல் நிலைப்புத்தன்மையுடன் ஆயுள் கெட்டி என்ற தன்மைக்கு உடம்பைக் கொண்டுவர ஆரம்பிக்கும். ஆக ஒருமனிதன் ஆரோக்கியமாக வாழவேண்டும் சீராக வாழவேண்டும் என்றால் இந்த ஆறுமண்டலமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமானது, அத்தியாவசியமானது. உடல்நலம் பேணக்கூடிய நம்முடைய முறைகள் அடிப்படையில்தான் இந்த ஆறு மண்டலங்களை வலுப்படுத்த முடியும்.
தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுவது, மதுவுக்கு அடிமையாவது, மாதுக்கு அடிமையாவது, புகை-போதைக்கு அடிமையாவது, வாழ்வியல் முறைகளை முழுமையாக மீறுவது, இதனடிப்படையில் உடல் தேய்வு, உடல் சோர்வு, உடல் தளர்வு, உடல் அழிவு எல்லாமே உண்டாகக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆக இந்த ஆறு மண்டலங்களை ஒரு சராசரி மனிதன் மேம்படுத்திக்கொண்டால் மட்டுமே ஆரோக்கியம் என்பது நிலைக்கக்கூடிய தன்மை இருக்கும். இந்த ஆறு மண்டலங்களையும் வலுப்படுத்த அறுசுவை உள்ள இயற்கை உணவுகளாலும், சைவ உணவுகளாலும் மட்டுமே சாத்தியமாகும். ஆக இந்த ஆறுமண்டலங்கள் அடிப்படையில்தான் நம்முடைய நாளமில்லா சுரப்பு மண்டலம், கழிவு மண்டலம், இனப்பெருக்க மண்டலம் எல்லாமே செயல்படும். நாளமில்லா சுரப்பு மண்டலத்தின் பணிகள் என்ன?, அதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?, கழிவு மண்டலத்தை ஒழுங்குபடுத்த, முறைப்படுத்த அதை சீராக்க என்னென்ன உணவுகளை சாப்பிடவேண்டும்?, எப்படி பேணி பாதுகாக்கவேண்டும்?, அடுத்து ஆணுக்கும் பெண்ணுக்குமான இனப்பெருக்கம் என்பது மனித சுழற்சிக்கு, வாழ்வியல் சுழற்சிக்கு, சமூக சுழற்சிக்கு எவ்வளவு அத்தியாவசியமானது?, என்பதையெல்லாம் அடுத்து வரக்கூடிய கட்டுரைகளில் நாம் தெள்ளத்தெளிவாகப் பார்ப்போம்.
நன்றி
No comments:
Post a Comment