மலபந்தம் மனபந்தம் என்று நான் சொல்லியிருந்தேன். கழிவுமண்டலத்தில் பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கிறது என்றால் அது மனதை பாதிக்கும், மனது பாதிக்கப்படுகிற பொழுது ஒரு மனிதனுக்கு மனஅழுத்தம், மனஉளைச்சல், மனவேதனை, தூக்கமின்மை போன்ற பல்வேறு மனம் சார்ந்த நிறைய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதற்குக் காரணம் கழிவுமண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்.

நாளமில்லா சுரப்பி (Endocrine glands):

தைராய்டுசுரப்பி:

ஹைபோ தைராய்டிசம் (hypothyroidism):
தைராய்டு குறைவாக சுரக்கக்கூடிய தன்மை அதாவது ஹைபோ தைராய்டிசம் வந்தது என்றால் பல்வேறு பிரச்சனைகள் வரும். உடல் அசதியாக இருப்பது, சோர்வாக இருப்பது, உடல் ஊதிக்கொண்டே செல்வது, கன்னம் வீங்குவது, கால் வீங்குவது, ஒரு பத்து நிமிடம் கூட ஒரு வேலையை செய்யமுடியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் வரும். மேலும் நிறைய பெண்கள் இந்தக் குறைபாட்டினால் அவதிப்படுவார்கள், அதாவது மாதவிடாய் வராமலிருப்பது, அவ்வாறு வந்தாலும் கூட அதிகமாக இருப்பது இவையனைத்தும் ஹைபோ தைராய்டிசம் இருப்பவர்களுக்கு வரும் பிரச்சனைகள்.
ஹைபர் தைராய்டிசம் (hyperthyroidism):
தைராய்டு அதிகமாக சுரக்கக்கூடிய தன்மை அதாவது ஹைபர் தைராய்டிசம் வந்தது என்றால் மனம் சார்ந்த பிரச்சனைகள், மன ஆவேசம், மன அழுத்தம், தலைமுடி முழுமையாக கொட்டிப் போவது, கண்பார்வையில் பிரச்சனை வருவது, கழுத்து எலும்பில் வலி வருவது, முதுகெலும்பு வலிப்பது, இடுப்பு எலும்பில் வலி இருப்பது, சிறிது தூரம் கூட நடக்கமுடியாமல் இருப்பது, மூச்சுத்திணறுதல் இவையனைத்தும் ஹைபர் தைராய்டிசம் இருப்பவர்களுக்கு வரும் பிரச்சனைகள்.
தைராக்ஸின் ஹார்மோன் முறையாக சுரந்தால்தான் பெண்களுக்கு பிரச்சனையே இல்லாத சூழல் இருக்கும். பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் என்பது மாதாமாதம் முறையாக வருகிறபொழுதுதான் நல்ல பலன் இருக்கும். ஆனால் தைராக்ஸின் குறைபாடு உள்ள பெண்களுக்கு மாதாமாதம் வருவதில்லை. நம் உடம்பில் நாளமில்லா சுரப்பிகளில் தைராய்டு ஹார்மோனுக்கென்று ஒரு தனி இடம் உண்டு.
அட்ரினல் சுரப்பி (Adrenal gland):

அடுத்து கணையம் சுரக்கக்கூடிய இன்சுலினைப் பற்றிப் பார்ப்போம்.
கணையம்(Pancreas):

நம் உடம்பில் சுரக்கக்கூடிய ஹார்மோன்கள் எல்லாமே நம் உடம்பில் பிரதானமாக இருக்கக்கூடிய உறுப்புகளை பலப்படுத்தக்கூடிய வேலையை செய்கிறது. நம் உடம்பிலேயே மிகப் பிரதானமான உறுப்பு என்று பார்த்தோம் என்றால் மூளை, இதயம், கல்லீரல், சிறுநீரகம் இவைகள்தான். இவைகளைத்தான் சித்தர்கள் ராஜஉறுப்புகள் என்று சொல்வார்கள். ஒரு நோய்க்கு மருந்து கொடுத்தோம் என்றால் அந்த நோய்க்கு மருந்து கொடுப்பதை விட ராஜஉறுப்புளைப் பலப்படுத்துவதே மேல் என்று சித்தர்கள் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞானம் அடிப்படையில் உருவான நவீன மருத்துவம் நோய்க்கான அறிகுறியைக் கண்டறிந்து நோய்க்கான அறிகுறியை மட்டுமே அழிக்கக்கூடிய தன்மை இருப்பதனால்தான் ஒரு நோய் போனால் இன்னொரு நோய் வருகிறது. எப்பொழுதுமே நம் உடம்பில் இருக்கக்கூடிய பிரதான உறுப்புகள் ஒழுங்காக முறையாக ஆரோக்கியமாக இருக்கக் கூடிய பட்சத்தில் பெரிய நோய்கள் எதுவுமே வருவது கிடையாது. மூளையை பலப்படுத்துவது நாளமில்லா சுரப்பிகள், சிறுநீரகத்தை பலப்படுத்துவது நாளமில்லா சுரப்பிகள், கல்லீரலை பலப்படுத்துவது நாளமில்லா சுரப்பிகள், இதயத்தை பலப்படுத்துவதும் நாளமில்லா சுரப்புகள் இதில் எந்த விதமான ஐயமும் கிடையாது. இப்பொழுது சிறுநீரகத்திற்கு வருவோம்.
சிறுநீரகம்(Kidneys):

பெண்களுக்கு கருப்பையில் (Ovary) சுரக்கக்கூடிய ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென் (Estrogen). பெண்களுக்கு கருப்பையில் Estrogenஎன்று சொல்லக்கூடிய ஹார்மோன் ஒழுங்காக முறையாக சுரந்தால்தான் மாதாமாதம் ஒரு கருமுட்டை உண்டாகி அது Fallopian tube வழியாக கர்ப்பப்பைக்குச்சென்று அந்த கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய Endometriumல் செல்லக்கூடிய செல்லக்கூடிய சூழல் இருக்கும். கருசுழற்சியும் உண்டாகக்கூடிய சூழல் அங்குதான் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆக எந்த ஒரு பெண்ணுக்கு Estrogenசுரப்பு குறைவாக இருக்கிறதோ அந்தப் பெண்ணுக்கு முறையற்ற மாதவிடாய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே இந்த Estrogen இருக்கக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து ஒரு பெண் சாப்பிடுகிற பொழுது கண்டிப்பாக நல்ல பலனைப் பெறமுடியும்.
ஆண்களுக்கு, ஒரு ஆண் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு நாளமில்லா சுரப்பி எதுவென்றால் Testosterone. இந்த Testosterone என்பது ஆண்களின் விதையில் உற்பத்தியாகும். அந்த விதையை கவனமாக அடிபடாமல் பேணிப் பாதுகாக்கச் சொல்வதற்கான காரணம் என்னவென்றால் இந்த விதையில் ஒரு ஆண்மைக்கான நாளமில்லா சுரப்பி உற்பத்தியாகக்கூடியது. எந்த ஒரு ஆணுக்கு நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக முறையாக உற்பத்தியாகிறதோ அந்த ஆணுக்குத்தான் மீசை முளைக்கிறது, ஆண்மைத் தன்மை வருவது, விரைப்புத்தன்மை வருவது, நெடுநேரம் கலவியில் புணரக்கூடிய தன்மை வருவது எல்லாமே Testosterone-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த Testosterone ஒழுங்காக முறையாக சுரக்கின்ற பொழுதுதான் ஒரு ஆணுடைய விந்துவிலும் விந்தணுக்கள் தேவையான அளவு இருக்கும். விந்துவில் கிட்டத்தட்ட 60 மில்லியன் உயிரணுக்கள் இருக்கவேண்டும், அதில் வேகமாக நீந்தக்கூடிய உயிரணுக்கள் 70 சதவீதமாவது இருக்கவேண்டும். விந்தணுக்களில் சீழணுக்கள், இரத்த அணுக்கள் இவைகள் இருக்கக்கூடாது. ஏனென்றால் இந்த சீழணுக்களும் இரத்த அணுக்களும் விந்தை முழுமையாக அழிக்கக்கூடிய தன்மை கொண்டது. அதுவெல்லாம் இல்லாத அளவிற்கு இருக்கவேண்டும், ஆரோக்கியமான விந்தணுக்கள் வெளிப்படவேண்டும், உடலுறவில் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், அதிகநேரம் புணரவேண்டும், இரவுநேரத்தில் விந்து உமிழ்தல் இருக்கக்கூடாது என்றால் ஒரு ஆணுக்கு Testosterone ஒழுங்காக இருக்கவேண்டும், அந்த Testosterone உற்பத்தியாகக்கூடிய விதைகள் ஒழுங்காக இருக்கவேண்டும். இந்த இடத்திலும் ஒரு ஆண் தன்னுடைய ஒழுக்கநிதியை மீறும்பொழுது அதாவது அடிக்கடி சுயஇன்பப் பழக்கத்தில் ஈடுபடும் பொழுது விதைகள் சேதாரம் ஆவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. விதைகளுக்குள் varicocele தாக்குதல் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. varicocele வந்தது என்றால் விதைகளில் உற்பத்தியாகக்கூடிய Testosterone என்று சொல்லக்கூடிய ஹார்மோன் குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனால் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்கின்ற எண்ணம் ஆண்களுக்கு இல்லாமல் போய்விடும், பெண்ணைப் பார்த்தாலே பயம், திருமணம் செய்வதற்கு பயம் இவ்வாறான பய உணர்வுகள் வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. எப்பொழுதுமே நாளமில்லா சுரப்பி மண்டலத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஹார்மோன்களும் தேவையான அளவு தேவையான நேரத்தில் ஒழுங்காக முறையாக சுரக்க ஆரம்பித்தால்தான் ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்தை, நல்வாழ்வை பேண முடியும்.

அடுத்த இதழில் இப்பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய உணவுகளைக் காண்போம்.
-தொடரும்
No comments:
Post a Comment