20160303

: 21 வகையான மேகநோய் ,சகலநோய்களும் நீங்கும். அப்ரேக் செந்தூரம்



கிருஷ;ண அப்ரேக்கட்டிகளை சுத்தித்து கால்பங்கு நெல்லுடன் கம்பளி மூட்டையைப் பிரிக்காமல், கைகளால் நன்கு பிசைந்து, ஊறிய அப்ரேக் அணுக்கள் துணி வழியே வெளியேறி, காடியிலே முற்றும் விழச் செய்து, சிலநாள் தெளியவைத்து அடியில் படியும் அப்ரேக் நவநீதத்தை வெளியிலில் உலர்த்தி எடுத்து 80 கிராம் வெங்காயம் 5 கிராம், வெள்ளைக் சாட்டாரணை வேரின்சாறு செல்லத்தக்க அளவு. ஆடாதோடை சாறு செல்லத்தக்களவு, ஆலம் விழுது கியாழம் செல்த்தக்களவு.

செய்முறை:
அப்ரேக் நவநீதத்துடன் வெங்காரத்தைச் சேர்த்துக் கல்வத்திலிட்டு, வெள்ளைச்சாட்டாணை வேர்ச்சாற்றினால் 3 மணிநேரம் அரைத்து, வில்லை தட்டி உலர்த்தி அகலிலிட்டு மேலகல் மூடி சீலைமண் செய்து 11ல்2 பங்கு சதுர அடிகுழியில் புடமிடவும். இப்படியாக 10 புடம் ஆடா தோடைச்சாற்றில் 10 புடம். ஆலம்விழுது கியாழத்தில் 10 புடம் ஆக அரைத்து, வில்லை தட்டி அகலிலிட்டு, கஜபுடமிட நல்லசெந்தூரமாகும்.

அளவு: 100 முதல் 200 மி.கிராம்: தினம் 2 வேளை, 1 மண்டலம்.
துணை மருந்து: பரங்கிப்படை சூரணம்: மார்க்கண்டேய சூரணம்: தேன்
தீரும்நோய்கள்: 21 வகையான மேகநோய்: மதுமேகம்: நீரழிவு: வெகுமூத்திரம்: மூத்திரக்கிரிச்சரம் முதலான சகலசிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களும் நீங்கும்.

No comments: