20160303

1. நோய் – வயிற்றுப்போக்கு




காரணங்கள் :

– ஜீரணமின்மை,

– எண்ணெய் பதார்த்தங்கள்,

– நெய், எண்ணெய் அதிகம் பயன்படுத்துவது

– மாவு பண்டங்கள்,

– காரமான உணவு,

– அதிக கண் விழிப்பு,

– அதிக பிரயாணம்




அறிகுறிகள் : வயிற்றுக் கடுப்பு, வயிறு இறைச்சல், வாந்தி, வாய் குமட்டல், புளிச்ச ஏப்பம், வாந்தி வருவது போல் உணர்வு, மலத்துடன் சளி, இரத்தம், சிறுநீரைக் கட்டுப்படுத்தும், காது அடைத்தல், கண் சரியாக தெரியாமை.




மருத்துவம் : காட்டாத்திப்பூ சூரணம் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.




மருந்து செய்முறை :




காட்டாத்திப்பூ சூரணம் தேவையானவை :

காட்டாத்தி பூ ¼ கிலோ

ஓமம் ¼ கிலோ




ஓமத்தை லேசாக வறுத்து இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்ய வேண்டும்.




காட்டாத்திபூவை இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்து இரண்டையும் ஒன்றாக நன்றாக கலக்கி தேன் அல்லது மோருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

1 comment:

Unknown said...

Send your address please