20160303

கற்ப மருந்தும் சாப்பிடும் முறையும்.





உணவும் கற்ப மருந்துகளும்.


கடுக்காய் கற்பம்.
கடுக்காயினை அமுரியில் பொடி செய்து கலந்து இருபது நாள் வெரு கடி அளவு உண்டு வரவும். பின் கள்ளியின் காயினை குமரியுடன் சமனாக கூட்டி பொடி பண்ணி அமுரியில் கலன்து மேற்ப்படி அளவாக இருபது நாள் உண்டு வரவும்.


மிளகு கற்பம்.
மிளகுடன் அமுரி குட்டி உண்டு வரவும்.நெய்யை வார்த்து அதில் வெள்ளம் போட்டு கூட மிளகு பொடி அதிகமாகே போட்டு நீர் வார்த்து வறுத்துக் கொள்ளவும். இடஹியும் உண்டு வரவும். இத எலா சித்தர்களும் செய்வார்கள்



பின் கரிசாலை
ஒரு மண்டலம் உண்டு வரவும். இதனால் உடல் கறுக்கும்.
பொற்றிலை, வல்லாரை, அவுரி ஆகியவற்றை சமனாக கூட்டி பாக்கு அளவு பாளி கலந்து ஒரு மண்டலம் உண்டு வரவும். இதனால் ஆண்மையும் ஒரு பெரும் சேனையின் பலமும், மன்மதன் போல் அழகும் வாய்க்கும்.
கடுக்காய் கற்பம் உண்ணும் போது மேலும்


மூதண்ட கஷாயம் உண்டு வரவும்.
அருகம் வேர் ஒரு பிடியும் மிளகு இருபத்து ஐந்தும்ஒரு படி தண்ணீர் வார்த்து எட்டில் ஒன்றாய் காயிசி அதில் ஆவின் வெண்ணை ஒரு பாக்களவு போட்டு மாலை வேளையில் மேற்படி கற்பம் உண்ணுமளவு உண்டு வரவும்.


பத்திய உணவுகள்.
மூலம் பார்த்து கர்ப்பம் உண்ணுகையில் கூட்ட வேண்டிய நல்ல பத்தியமாவன; பாலாகும் நெய்யாகும், பழங்களில் பெரும் பாலானவைகளாகும். மிளகும் தேனுமாகும், வெல்லம் கன்சா வாகும், பயிறாகும், பொன்னாங்கண்ணி கீரை, சிறு கீரையாகும், தூதுவளை இலை காயாகும். இம்முறையால் கர்ப்பம் உண்டு சுகம் சேரும்படி செயவும்.
இவற்றோடு மேலும் கரு வேம்பு, கிராம்பு, சாதிக் காய், கத்தூரி ஆகியவை களும் கூடப் போட்டு உண்டு வரவும். மனம் கூட்டுதற்கு சீரகம் போடு, மஞ்சள் போடு. பசு நெய் சேர்க்கவும்


தள்ள வேண்டியவைகள்.
கற்பம் கொள்ளும் பொது கைகொள்ள வேண்டிய கட்டுப் பாட்டு முறையி னைக் கேள். உப்பு, புளி, எண்ணெய், சுண்ணம் புலால் வகைகள். மோர் முதலியன. கடுகு, உள்ளி, காயம்,பெண் போகம் முதலியன. உறக்கமும் சோம்பலும் ஆகா. பலவற்றில் கவனம் செல்வதை நீக்கிவிட்டு மூலம் பாரே.


தலை முழுக மருந்து.
நெய் வார்த்து தேய்த்துக் கொண்டு சிறுபயிர் அரைப்பாக பண்ணி தேய்த்து தலை முழுகி வரவும். கடுக்காய், நெல்லிக்காய் மிளகு மஞ்சள், வேப்பன் வித்து இவைகளை பொடி பண்ணி அமுரியில் கலந்து மாதம் ஒரு முறை முழுகி வரவும். இதனால் கபால வாய்வு நீங்கி கபாலம் கெட்டிப்படும். கண் புகைசல் நீங்கும் உடல் இறுகும்.


நல்லெண்ணெய் தொடக் கூடாது. உபயோகித்தால் உடலெல்லாம் வெடிப்புண்டாகி விரிந்து விடும்.

No comments: