20160303

சிறுநீரகக் கல்லடைப்பும் மூலிகை மருத்துவமும்



அதிகமான உடல்சூடு, உணவு, நீர் போன்றவற்றின் மாறுபாடு, இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து, உடல் நீர் வற்றி, சிறுநீரின் உப்புக்களையும் உறையச் செய்வதால் சிறுநீரகத்தில் கல்லடைப்பு ஏற்படுகிறது.
சிறுநீரகக் கல் சிறியதாக இருக்கும்போதே அதற்குரிய மருத்துவ சிகிச்சை செய்துக் கொள்வது சிறந்தாகும். முhறாகஈ பெரிதாக இந்த நோய் வளர்ந்து. கல்லின் அளவு பெரியதாகிவிட்டால் மூத்திரைப்பையின் அடிப்புறம் தாங்க முடியாத ஏற்படும். சிறுநீர் விட்டுவிட்டு வரும். சில நேரங்களில் கலங்கிய பழுப்பு நிறத்துடன், தாங்க முடியாத வலியுடன் சிறுநீர் வெளியேறும். வயிற்றில் ஏற்படும் இந்த வலி வயிறு முழுவதும் பரவி பிறகு இடுப்புப் பகுதியிலும் வலியை உருவாக்கி விடும்.
முற்றிய நிலையில் சிறுநீரகக் கல்லானது நீர்த்தாரையின் சுவர்களை சேதப்படுத்திவிடும். இந்த நிலையில் சிறுநீருடன் இரத்தமும் சேர்ந்து, அடர சிவப்பு நிறமாக வெளிவரும்.
மருத்துவம்:
சிறுநீரகக் கற்களைக் கரைத்து. வெளியேற்ற உடல் சூட்டைக் குறைக்கும் மருந்துகளையும் உணவு முறைகளையும் தொடர்ந்து உண்டு வரவேண்டும். மூலிகை மருத்துவத்தில் சிறுநெருஞ்சில், சிறுபீனை, நீர்முள்ளி, வாழைத்தண்டு போன்றவை சிறுநீரகக் கற்களை கரைப்பதிலும், சிறுநீரை நன்கு வெளியேற்றுவதிலும் உறுதுணை புரிகின்றன. இவற்றில் சிறுநெருஞ்சில், சிறுபீளை மற்றும் நீர்முள்ளி ஆகியவை சமூகக் குடிநீராக தினமும் எடுத்துக்கொள்ள உகந்தவை. குஷhயம் அல்லது நிழலில் உலர்த்தப்பட்ட சமூலத்தின் தூளாகவும்(வெந்நீருடன்) கொள்ளலாம். வுhழைத்தண்டு உணவில் தினமும் சேர்க்கலாம். வுhழைத்தண்டு சாறு 50 மி.லி அளவுக்கு மேற்படாமல் தினமும் குடித்துவர ஆரம்பநிலை சிறுநீரகக் கற்கள் குணமாகும் என்பது திண்ணம்.

No comments: