20160303

மாதவிடாய்க் கோளாறுகள்




ரஜப்பிரவர்த்தினி:
1. முசாம்பரம்
2. பால் பெருங்காயம்
3. வெங்காரம் (பொரித்துப் பொடித்தது)- டங்கண பஸ்ம 10 கிராம்
4. அன்னபேதிச் செந்தூரம் காஸீஸபஸ்ம 10 கிராம்
இவற்றைக் கல்வத்திலிட்டுக் கற்றாழைச்சாறு (குமரிஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் எடுத்து 500 மில்லிகிராம் எடையுள்ள மாத்திரைகளாக ஆக்கவும்.
அளவும் அனுபானமும்:
ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு அல்லது மூன்று வேளைகள் வெந்நீர், கொள்ளுக் கஷhயம் அல்லது எள்ளுக் கஷhயத்துடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்: சூதகக்கட்டு (ஆர்த்தவரோத ரஜோரோத), வலியுடனும், சிரமத்துடனும், சூதகம் வெளிப்படுதல் (கஷ;டார்த்தவ) மற்றும் பலவித மாதவிடாய்க் கோளாறுகள். கருப்பை வலிவூட்டி. சிறுநீர் மற்றும் பிறப்புறுப்பு மண்டலத்தைத் தூய்மை செய்வித்து மாதாந்திர ருதுப்போக்கையும் மாதாந்திர பூப்புச் சுழற்சியையும் ஒழுங்கு படுத்துகிறது. இந்நிலைகளில் இது அசோகாரிஷ;டம் மற்றும் அசோகாதி வடியுடன் தரப்படுகிறது. கொள்ளுக் கஷhயத்துடனும் தரப்படுவதுண்டு

No comments: