20160303

படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்.வெள்ளருகு சூரணம்




வெள்ளருகு 20 கிராம்
சங்கன் வேர்ப்பட்டை 20 கிராம்
சிவனார் வேம்பு 40 கிராம்
பறங்கிச்சக்கை 80 கிராம்

பறங்கிச்சக்கையை சிறு துண்டுகளாக்கி ஒரு பானையில் இட்டு பசும்பால் 1 லிட்டருடன் தண்ணீர் 1 லிட்டர் கலந்து எடுத்து 3ல்4 பாகம் சுண்டியபின் தண்ணீர் விட்டுக்கழுவி பறங்கிச் சக்கையை நன்கு வெயிலில் உலர்த்தவும். புpற சரக்குகளைத் தனிக்தனியே வெயிலில் உலர்த்தி, தனித்தனியே இடித்துச் சலித்து ஒன்று கலந்து வைத்துக் கொள்ளவும். குடைசியாக 160 கிராம் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளவும்.

அளவு, அனுபானம்:
காலை- இரவு உணவுக்குப் பின் 1 முதல் 2 கிராம், தண்ணீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்

No comments: