20160303

, பக்கவாதம் பஞ்ச சூத செந்தூரம்



வீரம், பூரம், லிங்கம், ரசம், ரசசெந்தூரம். வகைக்கு 35 கிராம், நெருஞ்சிச்சாறு செல்லத்தக்க அளவு. தாய்ப்பால் அல்லது வெள்ளாட்டின் பால் செல்லத்தக்க அளவு.
செய்முறை:
மேலே கூறப்பட்ட பாஷhணங்களை முறைப்படி சுத்தி செய்து, கல்வத்தில் இட்டு ஒன்றன்பின் ஒன்றாக போட்டு அரைத்து, நெருஞ்சில்சாறு விட்டு 12 மணிநேரம் சுருக்குக் கொடுத்து, எடுத்து, குழியம்மியில் இட்டு கொடிவேலிவேர் குடிநீரால் ஒரு வாரம் நன்கு அரைத்து உலர்த்தி பதனப்படுத்துக.
அளவு:
50 முதல் 100 மில்லிகிராம் வரை, காலை மாலை இருவேளை
துணை மருந்து:
தேன், நெய், மார்க்கண்டேய சூரணம்.
நோய்கள்:
கை, கால்கள் பிடிப்பு, பக்கவாதம், குத்தல், குடைச்சல், உடலில் ஒடி ஒடி குத்துகின்ற வாய்வு, நாக்குவாதம் முதலியன குணமாகும்.
பத்தியம்:
புளி, புகை, புணர்ச்சி நிக்கி, பாலன்னம் உட்கொள்ளவும்.
குறிப்பு:
மருந்து 5 நாட்கள், 5 நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடியும் மருந்து தரவேண்டும். நோய்க்கேற்ற துணை மருந்துகளில், அவரவர் அனுவத்திற்கேற்றபடி கொடுக்கலாம்.

No comments: