20160303

விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை மன்மதலோக செந்தூரம்



சுத்திசெய்த அயத்தூள் 150 கிராம் சுத்திசெய்த செம்மண் பூராகம் வகைக்கு 150 கிராம்.
செய்முறை:
இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு 6 மணிநேரம் அரைத்து எடுத்து வில்லை செய்து, ஒட்டிலிட்டு மேலோடு மூடி சீலைமண் செய்து, 2 அடி சதுரபுடமிடவும். மறுபடியும் பூநாகம் சேர்த்து முன்போல் அரைத்து புடம். இவ்வாறு 16 தடவை புடமிட்டு 17ம் தடைவ பூநாகம் சேர்க்காமல் புளிப்பு மாதுளம்பழச்சாறு விட்டு 3 மணிநேரம் அரைத்து சிறு சிறு வில்லைகளாக செய்துலர்த்தி, முன்போல் புடமிட்டு எடுக்கவும்.
அளவு:
25 முதல் 50 மில்லிகிராம் வரை காலை மாலை இருவேளை ஒரு மண்டலம். புளி, புகை, புணர்ச்சி தள்ளி.
துணைமருந்து:
நெய், தேன், பாதாம் அல்வா, சிட்டுக்குருவிலேகியம்.
தீரும் நோய்கள்:
விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை இவைகளை நீக்கி உடலில் நல்ல இரத்தம் விருத்தியாகி நரம்புகள் முறுக்கேறி தேகம் வன்மை பெறும். ஆண்மை சக்தியை விருத்தி செய்து வாலிய சக்தியை உண்டாக்கும். இதை வருடத்தில் 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் வஜ்ஜிர உடம்காகும்.

1 comment:

Anonymous said...

செம்மண் பூநாகம் என்றால் என்ன