20160303

பசியின்மை, இரத்தக்குறைவு, வயிற்றுப் பொருமல் பலவீனம்.




சிந்தாதி லேகியம்:
6 மாத காடி 8 லிட்டர், புளித்த மோர் 8 லிட்டர், கரிசலாங்கண்ணி சாறு 2 லிட்டர், இஞ்சிச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு, நெருஞ்சிச்சாறு, சிறுகீரைச்சாறு, சிறுசெருப்படைச்சாறு, தென்னம்பூச்சாறு, கீழ்க்காய் நெல்லிக்காய் வகைக்கு 1 லிட்டர், ஆவின்பால் 3 லிட்டர், உலர்ந்த புளியம் இலை 1 கிலோ, சடாமஞ்சில், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிவத்தல், ஒமம், கோஷ;டம், சீரகம், வால்மிளகு, ஏலம், கிராம்பு, தாளிசபத்திரி, இலவங்கப் பட்டை, ஆனைத்திப்பிலி வகைக்கு 20 கிராம். அன்னபேதி செந்தூரம் 100 கிராம். பனைவெல்லம் 2 கிலோ, நெய் பதினொன்றை கிலோ.
செய்முறை: மேலே குறிப்பிட்ட சாறு, திரவ, பால் இவைகளை ஒன்றாய்ச் சேர்த்து பனை வெல்லத்தைப் பொடித்துப் போட்டுக்காய்ச்சி, மண், கல் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி காய்ச்சி பாகாக்கி, மேலே குறிப்பிட்ட மற்ற சரக்குகளைச் சூரணித்து இத்துடன் சேர்த்து அன்னபேதி செந்தூரத்தையும் கலந்து துழாவி, லேகியபதமாக வருகையில் நெய்சேர்த்து பிசறி இறக்கி ஆறிய பின் பதனப்படுத்தவும்.
அளவு: 10கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள் நீருடன்.
தீரும் நோய்கள்: மகோதரம், பீலிகை, சோகை, பாண்டு, காமாலை, கிராணி, பசியின்மை, இரத்தக்குறைவு, வயிற்றுப் பொருமல் பலவீனம்

No comments: