20160303

2. நோய் : சளி, இருமல்

காரணங்கள் :
– குளிர்ந்த தண்ணீர் குடித்தல்.
– குடிநீர் மாறுபடுதல்.
– இரசாயன பொருட்கள் சுவாசித்தல்.
– நுரையீரல் குழாய் சிறிதாக இருத்தல்.
– உள் நாக்கு வளர்ச்சி

அறிகுறிகள் : இருமல், தும்மல், தலைவலி, மூக்கில் நீர் வடிதல்

மருத்துவம் :
– சந்திர கலா லேபம்
– துளசி மனப்பாகு
– ஆடாதொடை சூரணம்
– கற்பூராதி தைலம்
– திரி கடுகு சூரணம்
– தூதுவலை லேகியம்

மருந்து செய்முறை :

துளசி மனப்பாகு

துளசிச்சாறு – 1 லிட்டர்
பனைவெல்லம் – 1 கிலோ
சீரகம் – 200 கிராம்
இஞ்சி – ¼ கிலோ

ஒரு லிட்டர் துளசிச் சாறுடன் இஞ்சியை கழுவி தோல் நீக்கி 100 மில்லி சாறு கலந்து பனைவெல்லம் 1 கிலோ சேர்த்து, சீரகத்தை லேசாக வறுத்து நீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் அடுப்பில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து நெல்லிக்காய் அளவு உணவிற்குப்பின் பயன்படுத்த வேண்டும்.

ஆடாதொடை சூரணம் :

தேவையானது : நிழலில் உலர வைத்த ஆடாதொடை
இலை 400 கிராம்
மிளகு 100 கிராம்

மிளகை லேசாக வறுத்து இடித்து தூள் செய்து சளித்துக் கொள்ள வேண்டும்.

ஆடாதொடை இலையையும் தனியாக இடித்து சளித்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து பயன்படுத்த வேண்டும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா

அளவு 1 டீஸ்பூன் தேன் அல்லது வெந்நீர், உணவிற்குப்பின் ஒரு நாளைக்கு 3 வேலை

தூதுவலை லேகியம் :

தேவையான பொருட்கள் :

தூதுவலை சமூலம் (தலை முதல் கால் வரை) – டி கிலோ
ஆடாதொடை – 200 கிராம்
துளசி – 100 கிராம்
ஓமவல்லி – 100 கிராம்
கண்டங்கத்திரி – 50 கிராம்
இன்பூரல் – 50 கிராம்
(எல்லாம் சேர்த்து 1 கிலோ)

சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
சித்தரத்தை – 25 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
இஞ்சி சாறு – 50 மில்லி
பனைவெல்லம் – 1 கிலோ
தேன், நெய் தேவையான அளவு

மேற்கண்ட மூலிகைகளை பச்சையாக சேகரித்து ஒன்று இரண்டாக உரலில் விட்டு இடித்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் ஆகியவைகளை இளம் சூடாக வறுத்து நன்கு இடித்து வஸ்திர காயம் செய்து கொள்ளவும். இஞ்சியை இடித்து 50 மில்லி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். மூலிகை வேகவைத்த சாறு 1 லிட்டர் இஞ்சி சாறு 50 மில்லி இவைகளை ஒன்று சேர்த்து பனை வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். பனைவெல்லம் கரைந்ததும், சாறை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து முதிர் பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். முதிர் பாகு பதம் வந்தவுடன் வஸ்திர காயம் செய்து வைத்திருக்கவும். சூரணத்தை அதில் போட்டு நன்றாக கலந்து நெய்விட்டு நன்றாக கிளர வேண்டும். பின்பு ஆறவைத்து சிறிது தேன் கலந்து பயன்படுத்தவும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா
நாள் ஒன்றுக்கு உணவிற்குப்பிறகு 3 வேளை நெல்லிக்காய் அளவு பயன்படுத்தவும்.

No comments: