20160303

மலட்டுத்தன்மை கர்ப்பக் கோளாறுகள் நீங்கி கரு தங்கும்








வெள்ளருகு சூரணம்(வேறு)

வெள்ளருகு 100 கிராம்
மிளகு 10 கிராம்
வெள்ளருகை நிழலில் உலர்த்தி இடித்து, சூரணித்துக் கொள்ளவும். முpளகை நன்கு பொடித்துச் சலித்து இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
அளவு, அனுபானம்:
மாவிடாய் ஆன நாள் முதல் 3 நாட்கள் காலையில் மட்டும் ஒரு வேளை 1 கிராம் அளவு மருந்தை பசும்பாலுடன் சாப்பிட்டு வரவும். தொடர்ந்து 3-4 மாதங்கள் (மாரவிடாய்க் காலத்தில் மட்டும்) சாப்பிடவும்.
தீரும் நோய் : கர்ப்பக் கோளாறுகள் நீங்கி கரு தங்கும்.

விளக்கம்:
திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்குள் குழந்தை பெற முடியாத நிலை மலட்டுத்தன்மை எனப்படுகிறது.
பெண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
• கருக்குழாய், கற்பப்பை, யோனி ஆகிய இடங்களில் வாயு அடைப்பு
• கற்பப்பை வலுவின்மை
• கற்பப்பை சுருங்குதல்
• யோனி, கருக்குழாய், கற்பப்பை ஆகிய இடங்களில் சதை வளர்ச்சி
• போதை வஸ்துக்கள் எடுத்துக் கொள்ளுதல்.
• சீரற்ற மாதவிடாய்
• கர்ப்பத்தை தள்ளிப்போட உபயோகிக்கும் மருந்குகள்.
• கற்பப்பையில் உள்ள புழுக்கள் (இவை மலட்டுத்தன்மையைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்தின் குணத்தை சில சமயங்களில் முறியடித்துவிடும்).
குறிப்பு:
மலட்டுத் தன்மையில் பிரதானமாக இருக்கக்கூடிய தோஷ;ங்களை நோயானியின் வார்த்தையிலிருந்தும் நாடியிலிருந்தும் தெரிந்துக் கொள்ளலாம். பொதுவான பெண் மலட்டை
• ஆதி மலடு
• கரு மலடு
• காக்க மலடு
• கரலி மலடு
என்ற நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்.
ஆண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
• விந்தணுக்கள் குறைவு
• ஆண்குறித் தளர்ச்சி
• விதைப்பையில் அடிபடுதல்
• பரபரப்பான நவீன வாழ்க்கை முறை
• மன நிம்மதி இல்லாமை
• நாள்பட்ட தைராய்டு பிரச்சினை
• சிறுவயதில் புட்டாலம்மை நோயால் பாதிக்கப்படுதல்
• முதுகுத் தண்டில் அடிபடுதல்

No comments: