20160303

விந்துஊறும் தாதுகட்டும், நரம்புகள் வலுப்படும் அயச்செந்தூரம்



நன்கு சுத்திசெய்த அயத்தூள் 250 கிராம், மான்செவிக்கள்ளிப் பால் 200 மி.லி உதியம் பட்டைச்சாறு செல்லத்தக்களவு.
செய்முறை:
அயத்தூளை மான்செவிக்கள்ளிப்பாலில் போட்டு வெயிலில் வைக்க நீறும். நன்கு காய்ந்தபின் சுரண்டி கல்வத்தில் போட்டு, உதியம் பட்டை சாற்றினால் 12 மணிநேரம் அரைத்து 11-2 அடி சதுர குழியில் புடமிடவும். இப்படி 10 புடமிட மிகமென்மையான சிவந்த செந்தூரமாகும்.
அளவு:
100 முதல் 200 மி.லி கிராம், தினமிருவேளை, தேனில், 1 மண்டலம்.
தீரும் நோய்கள்:
பாண்டு, சோகை, காமாலை, இரத்த குறைவு நீங்கும், உடல் இறுகும், விந்துஊறும் தாதுகட்டும், நரம்புகள் வலுப்படும்.

No comments: