20160303

இரத்த உற்பத்தி உண்டாகும். சுயமக்கினி செந்தூரம்



சுத்தி செய்த:
இரசம் 40 கிராம், மனோசிலை 20 கிராம், கந்தகம் 80 கிராம், காந்தம் 160 கிராம், அயத்தூள் 320 கிராம், குமரிச்சாறு செல்லத்தக்களவு.
செய்முறை:
கந்தகத்தையும் இரசத்தையும் கல்வத்திலிட்டு நன்கு கறுப்பாகும் வரை அரைத்து பிறகு மற்ற சரக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக அரைத்துச் சேர்த்து, குமரிச்சாறுவிட்டு 6 மணி நேரம் நன்கு அரைத்து உலர்த்திப் பொடித்து வெண்கலத்தட்டில் பரப்பி கடும் வெயிலில் வைக்க பூத்துவிடும். ஆறியவின் கல்வத்திலிட்டு அரைத்துப் பயன்படுத்தவும்.
அளவு:
100 முதல் 200 மி.கிராம் வரை, தினம் 2 வேளை 1 மண்டலம்.
துணைமருந்து:
நெய், தேன், சீரகசூரணம், சீந்தில் சூரணம்.
தீரும் நோய்கள்:
வாத குன்மம், மகோதரம், மூலம், கிராணி, பேதி, காமாலை, பாண்டு, சோகை, இரத்தக் குறைவு நோய்கள் நீங்கி இரத்த உற்பத்தி உண்டாகும்

No comments: