20160303

தங்க செந்தூரம்




தங்கம் 10 கிராம்: கந்தகம் 50 கிராம்: சுத்திசெய்த பூநாகம் 30 கிராம்: வெங்காரம் 30 கிராம். கோவையிலைச் சாறு செல்லத்தக்களவு.

செய்முறை: தங்கம் தவிர மற்ற சரக்குகளைக் கல்வத்திலிட்டு செம்முள்ளிக்கீரைச்சாறு, கோவையிலைச்சாறு விட்டு 48 மணி நேரம் அரைத்துக்காயவைத்துப் பொடி செய்து, தங்கத்தை மூசையில் வைத்து உருக்கி கண்விட்டாடும்போதெல்லாம் ஒவ்வொரு சிட்டிகை அளவு. மேற்படி சித்தப்படுத்தின பொடியை கிராசம் கொடுத்து வருக. மூசை பழுதுபடும் சமயமாயின், தங்கத்தை ஆறவிட்டுடெடுத்து, மறுமூசையிலிட்டு, மீண்டும் உருக்கி கண்விட்டாடும்போது, சிறுசெருப்படைச்சாற்றினால் 12 மணிநேரம் அரைத்து, வில்லைசெய்து, காய்ந்த பின், லேகல் மூடி சீலைமண் செய்து உலர்ந்தபின் 25 எருவில் புடமிடவும் இப்படி, 3 புடமிட மிக உயர்ந்த செந்தூரமாகும்.

அளவு: 25 முதல் 50 மி.கிராம் தினம் 2 வேளை, 1 மண்டலம்.

துணைமருந்து: தேன், நெய், பாதாம் அல்வா. சுpட்டுக் குருவி லேகியம்.

தீரும் நோய்கள்: ஆண்மையின்மை, துரிதஸ்கலிதம், விந்து நீற்றுப் போதல் இவைகளை நீக்கி அதிகப்படியான போக சக்தியினை உண்டாகும் 7 முதல் 10 நாட்களில் நன்கு பலன் தெரியும். எனினும் 20 நாட்களுக்காவது குறையாமல் சாப்பிட வேண்டும். சப்த தாதுகளும் வலுப்பெற்ற உடல் வலுவடைந்து முகப்பொலிவும் தேஜஸீம் உண்டாகி மேனி பொன்னிறம் பெறும்.

பத்தியம்:
பூரண குணம் ஏற்படும் வரை புளி, புகை, புணர்ச்சியின்றி நல்ல சத்துள்ள உணவுகளை உண்டு வருதல் நல்லதாகும்.

No comments: